இன்றைய ராசிபலன் (20.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (20.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன


மேஷம்:

அசுவினி: உறவுகளை அனுசரித்து செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும்.

பரணி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

கார்த்திகை 1: குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில் உறவினரால் சிக்கல் உண்டாகும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.

ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாகனப் பயணத்தில் வேகம் தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிடம் 1,2: எதிலும் இன்று அலட்சியம் வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபார முயற்சி வெற்றியாகும்.

கடகம்:

புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.

பூசம்: பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

ஆயில்யம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

சிம்மம்:

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.

பூரம்: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

உத்திரம் 1: உங்கள் வேலைகளை இன்று மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.

அஸ்தம்: வரவு செலவில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும்.

சித்திரை 1,2: போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் தடைகள் தோன்றும்.

துலாம்:

சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் கூடும். பணியிட பிரச்னைகள் விலகும்.

சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மனக்குழப்பம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

அனுஷம்: செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.

கேட்டை: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.

தனுசு:

மூலம்: அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.

பூராடம்: பெரியோரின் உதவி கிடைக்கும். வேலையில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்.

உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது.

திருவோணம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.

அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் இடத்தில் நிதானம் காப்பது நன்மையாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.

சதயம்: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி விலகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த வேலையை மீண்டும் தொடர்வீர்.

ரேவதி: நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு காண்பீர். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!