இன்றைய ராசிபலன் (15.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலை இன்று எளிதாக நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்தவற்றை நடத்தி முடிப்பீர்.
பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். அலுவலக நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன்களை அடைப்பீர்.
ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர். வருவாய் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புதிய முயற்சியில் எச்சரிக்கைத் தேவை.
புனர்பூசம் 1,2,3: வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. நினைத்த வேலை நடக்கும். முன்னோரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கைத் தேவை.
பூசம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவு செலவில் கவனம் தேவை.
சிம்மம்:
மகம்: நினைப்பது நடக்கும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
பூரம்: வியாபார நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதிநிலை உயரும். வெளியூர் பயணத்தில் நன்மை உண்டு.
கன்னி:
உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.
அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பு உண்டாகும். ஒருசிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 1,2: உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பிறர் உதவியால் விருப்பம் நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
துலாம்:
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். தெய்வ பலத்தால் விருப்பங்கள் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.
சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று லாபம் அடைவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.
விசாகம் 1,2,3: உங்களை சங்கடப்படுத்திய நெருக்கடி விலகும். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர். முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். விழிப்புணர்வு அவசியம்.
அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். மனம் குழப்பம் அடையும்.
கேட்டை: உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு:
மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூராடம்: நண்பர்கள் ஆதரவு பலம் தரும். திட்டமிட்டிருந்த வேலையை நடத்தி சாதிப்பீர். வருமானம் உயரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். பகைவர் தொல்லை விலகும். உடல் நிலை சீராகும். பிரச்னையை பேசித் தீர்ப்பீர்.
திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். செய்து வரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.
அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். எடுத்த வேலை நடக்கும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
சதயம்: பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.
பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்படுவது நல்லது.
மீனம்:
பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மேற்கொள்ளும் வேலையில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். உழைப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: தாய்வழி உறவுகள் உதவியால் வேலைகளை நடத்தி முடிப்பீர். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணியாளர்களுக்கு உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னை தோன்றும். நிதானம் காப்பது நல்லது.
(வீடியோ இங்கே )



