சந்திரிகா உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சிக்கல்: கால அவகாசம் கோரல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் (ரத்துச் சட்டம்) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு மாதங்களில் தன் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கொழும்பில் ஒரு சிறிய வீடு கண்டுபிடிக்கப்பட்டு புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகின்றன, அவை முடிந்தவுடன் அங்கு குடியேறுவேன் எனத் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மூன்று மாத முன்னறிவிப்பு விதி இருந்தாலும், இயன்றால் விரைவில் வெளியேறுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறியுள்ளார்.
சமீபத்தில் இடறி விழுந்ததில் இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், உடல்நலக் காரணங்களால் தற்போது அசைவதில் சிரமம் உள்ளதாகவும், மகன் குடியேறுவதில் உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசிடம் வாடகை செலுத்தி அதே இல்லத்தில் தொடர அனுமதி கேட்டிருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டதாகவும், இதுவரை அந்த இல்லத்திற்கான பழுது பார்க்கும் பணிகளில் தனிப்பட்ட முறையில் ரூ. 14 மில்லியன் செலவிட்டதாகவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய அரசு கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்காமல் முன்னாள் ஜனாதிபதிகளை வீடுகளில் இருந்து வெளியேற்றுவதையே முன்னிலைப்படுத்துகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



