அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை: வேடிக்கை மட்டும் பார்க்கின்றேன்: சமல் ராஜபக்ச
#SriLanka
#Mahinda Rajapaksa
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 hours ago

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது.
நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும்.
பல மாதங்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த சமல் ராஜபக்சவிடம் அரசியல் நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



