தமிழ் மக்களுக்கான நீதி கோரி ஜெனிவாவில் முன்னிலையாகும் அர்ச்சுனா (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Parliament
#Geneva
#Lanka4
#Archuna
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
2 hours ago

இந்த நாட்டில் நடந்த குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(10.09.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு பயங்கரவாதி என யாரவது கையை உயர்த்திக் கூறுங்கள். யாரும் கையை உயர்த்தவில்லை.
அதேபோல, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர ஒரு பயங்கரவாதி இல்லை என நானும் கூறுவேன். ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது.
அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



