நீரில் மூழ்கி இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு! அம்பாறையில் சோகம்
#SriLanka
#Ampara
#Lanka4
Mayoorikka
3 hours ago

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர், மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் நேற்று மாலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



