முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பிணை!
#SriLanka
#Court Order
#Lanka4
#Bail
Mayoorikka
3 months ago
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
