நாட்டின் அதிக வெப்பமான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும்.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



