ஹொரணையில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!
#SriLanka
#Investigation
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஹொரணை, கெபெல்லேகொடவில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்டவர் பக்கத்து வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த வீட்டில் வசிப்பவர் பாதிக்கப்பட்டவரை ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் ஹொரணையைச் சேர்ந்த 66 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
