எல்லவில் விபத்துக்குள்ளான பஸ் போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டதல்ல!

எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் விபத்துக்குள்ளான பஸ் 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டதல்ல என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகர தெரிவித்தார்.
ஓய்வு நேரச் சுற்றுலாக்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த வீதியில் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், மோட்டார் போக்குவரத்துத் துறையின் ஒரு குழுவினர் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தனர்.
மேலும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI) மற்றும் போக்குவரத்து அமைச்சின் வீதி பாதுகாப்பு திட்டத்தின் அதிகாரிகளும் இன்று விபத்து இடம்பெற்ற இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



