பஞ்சிகாவத்தை தனியார் வங்கிக்கு அருகில் துப்பாக்கிச்சூடு - உயிருக்கு போராடும் நபர்!
#SriLanka
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
மருதானை, பஞ்சிகாவத்தை வீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
