முஸ்லிம் சமூ­கத்­திற்கு நியா­ய­மான பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­தது கவ­லை! பிரதமர்

#SriLanka #PrimeMinister #Lanka4 #Ministry of Education #Harini Amarasooriya
Mayoorikka
14 hours ago
முஸ்லிம் சமூ­கத்­திற்கு நியா­ய­மான பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­தது  கவ­லை! பிரதமர்

இலங்­கையின் 2026-ஆம் ஆண்­டுக்­கான கல்வி சீர்­தி­ருத்தக் கொள்­கையை வடி­வ­மைக்கும் கல்வி தொடர்­பான கொள்கை வகுக்கும் அமைப்­பு­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு நியா­ய­மான பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­தது குறித்து எமது ஆழ்ந்த கவ­லையை தெரி­விக்க விரும்­பு­கிறோம். 

இது நியாயம், சமத்­துவம் மற்றும் தேசிய ஒற்­றுமை ஆகி­ய­வற்றின் ஆணி­வேரைப் பாதிக்கும் விட­ய­மாகும் என தேசிய சூரா சபை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பா­னது எமது நாட்டை பல்­மத, பல்­க­லாச்­சாரப் பின்­னணி கொண்ட பிர­ஜை­களை உள்­ள­டக்­கிய நாடாக அங்­கீ­க­ரித்­துள்­ளது என்­பதை நீங்கள் அறி­வீர்கள். மேலும், அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை உரி­மைகள் தொடர்­பான விதி­மு­றைகள் ஒவ்­வொரு தனி­ந­ப­ருக்கும் ‘சிந்­தனை, மன­சாட்சி மற்றும் மத சுதந்­திரம்’ ஆகி­ய­வற்றை வழங்­கு­வ­தோடு, ஒவ்­வொரு குடி­ம­க­னுக்கும் ‘தமது மதம் அல்­லது நம்­பிக்­கையை வழி­பாடு, கடைப்­பி­டித்தல், நடை­மு­றைப்­ப­டுத்தல் மற்றும் கற்­பித்தல் மூலம் வெளிப்­ப­டுத்தும் சுதந்­தி­ரத்தை’ வழங்­கு­கி­றது. அரசு கொள்­கையின் வழி­காட்­டுதல் கோட்­பா­டுகள் (Directive Principles of State Policy) அமுல்­ப­டுத்­தப்­பட முடி­யா­த­வை­யாக இருப்­பினும், நாட்டின் உயர் நீதி­மன்­றங்­களால், ‘அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை வழி­ந­டத்த வேண்­டிய நியா­யத்­தன்­மைக்­கான தர­நி­லைகள் அல்­லது விதி­மு­றைகள்’ என்று வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன. 

இந்தச் சூழ்­நி­லையில், கல்வி தொடர்­பான அனைத்து முக்­கிய நிறு­வ­னங்­க­ளிலும், குறிப்­பாக சீர்­தி­ருத்­தங்கள் தொடர்­பா­ன­வற்றில், முஸ்லிம் கல்­வி­யா­ளர்கள், கல்­வி­யியல் வல்­லு­நர்கள் மற்றும் துறைசார் நிபு­ணர்­க­ளுக்கு நியா­ய­மான பிர­தி­நி­தித்­துவம் இருப்­பதை உறு­தி­செய்ய உங்­க­ளது அவ­சரத் தலை­யீட்டைக் கோரு­கிறோம் தேசிய அபி­வி­ருத்­திக்கு கல்வி ஒரு அடித்­த­ள­மாக உள்­ளது. 

மேலும், நமது பல்­லின மற்றும் பல்­மத நாட்டில் சமூ­கங்­களை ஒன்­றி­ணைக்கும் ஒரு பால­மா­கவும் இது உள்­ளது. எனவே, இத்­த­கைய ஒரு பெரிய சீர்­தி­ருத்தம் இலங்­கையின் பன்­மு­கத்­தன்­மை­யையும் ஒரு­மைப்­பாட்­டையும் பிர­தி­ப­லிப்­ப­தாக இருக்க வேண்டும். இருப்­பினும், வர­வி­ருக்கும் மாற்­றங்­ககள் முக்­கி­ய­மா­ன­வை­யாக இருந்­த­போ­திலும், தற்­போ­தைய நிய­ம­னங்­களில் ஒரு முக்­கிய இடை­வெளி காணப்­ப­டு­கி­றது: தேசிய கல்வி ஆணைக்­குழு (NEC): 15 உறுப்­பி­னர்கள், முஸ்லிம் கல்­வி­யா­ளர்கள் எவ­ருக்கும் பிர­தி­நி­தித்­துவம் இல்லை. தேசிய கல்வி நிறு­வ­கத்தின் (NIE) கல்வி விவ­கா­ரங்கள் சபை: 

15 உறுப்­பி­னர்கள், முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்லை. தேசிய கல்வி நிறு­வ­கத்தின் (NIE) சபை: 11 உறுப்­பி­னர்கள், ஒரே ஒரு முஸ்லிம் தொழி­ல­திபர் மட்­டுமே உள்ளார், முஸ்லிம் கல்­வி­யா­ளர்கள் எவ­ருக்கும் பிர­தி­நி­தித்­துவம் இல்லை. உத்­தேச கல்விச் சபை வரைவுக் குழு: 9 உறுப்­பி­னர்கள், முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்லை. தன்­னார்வ ஆலோ­சனை சபை (கல்வி அமைச்சு): 14 உறுப்­பி­னர்கள், முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்லை. இந்த அமைப்­பு­களில் இருந்து முஸ்லிம் சமூகம் விலக்­கப்­பட்­டி­ருப்­பது, இலங்­கையின் மக்கள் தொகையில் சுமார் 10% உள்ள முஸ்லிம் சமூ­கத்­திற்கு, கல்­வியின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்கும் சீர்­தி­ருத்­தங்­களில் ஒரு குரல் கூட இல்லை என்­பதைக் காட்­டு­கி­றது. 

இத்­த­கைய புறக்­க­ணிப்பு, முக்­கி­ய­மான கலாச்­சார, மொழி மற்றும் மத கண்­ணோட்­டங்­களை கவ­னிக்­காமல் விடு­வ­தோடு மட்­டு­மல்­லாமல், நமது தேசம் ஒற்­று­மை­யையும் நியா­யத்­தையும் வெளிப்­ப­டுத்த வேண்­டிய நேரத்தில் சமத்­து­வ­மின்மை பற்­றிய ஒரு கவ­லை­யான சமிக்­ஞை­யையும் அனுப்­பு­கி­றது. இந்த புறக்­க­ணிப்பின் விளை­வுகள் பார­தூ­ர­மா­னவை என்­பதை நாம் பணி­வுடன் குறிப்­பிட விரும்­பு­கிறோம்: நம்­பிக்கை இழப்பு: இந்த சீர்­தி­ருத்­தங்­களில் தங்­க­ளுக்கு இட­மில்லை என உணரும் சமூ­கங்கள் அவற்றின் மீது நம்­பிக்கை வைக்க முடி­யாது.

 கொள்கை குறை­பா­டுகள்:

 முஸ்லிம் கல்­வி­யா­ளர்கள் இல்­லாமல், அனைத்து தரப்பு மாண­வர்­களின் உண்­மை­யான தேவை­க­ளுக்கு இந்த சீர்­தி­ருத்­தங்கள் பதி­ல­ளிக்கத் தவ­றி­விடும். தேசிய ஒற்­று­மைக்கு அச்­சு­றுத்தல்: கல்வி எம்மை ஒன்­றி­ணைக்க வேண்­டுமே தவிர, பிளவு மற்றும் அந்­நி­யப்­ப­டுத்­தலை உரு­வாக்கக் கூடாது. எனவே, இவ்­வி­டயம் தொடர்­பாக பின்­வரும் நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­பட வேண்டும் என்று விந­யமாய் வேண்­டிக்­கொள்­கிறோம்: தேசிய கல்வி ஆணைக்­குழு (NEC), தேசிய கல்வி நிறு­வ­கத்தின் (NIE) சபை, கல்வி விவ­கா­ரங்கள் சபை மற்றும் பிற சீர்­தி­ருத்தம் தொடர்­பான குழுக்­களில் தகு­தி­வாய்ந்த முஸ்லிம் கல்­வி­யா­ளர்கள் மற்றும் துறைசார் நிபு­ணர்­களை உட­ன­டி­யாக நிய­மிக்க வேண்டும்.

 கல்வி நிர்­வா­கத்தில், குறிப்­பாக 2026 சீர்­தி­ருத்த செயல்­மு­றையின் போது, அனைத்து முக்­கிய சமூ­கங்­க­ளுக்கும் நியா­ய­மான பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­தி­செய்யும் ஒரு பரி­பூ­ரணக் கட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்டும். கடந்த காலத்தில் ஏற்­பட்ட அந்­நி­யப்­ப­டுத்­தல்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையில் (UNHRC) முடிந்து, இந்தத் நாட்டை வெளி­நாட்டுத் தலை­யீ­டு­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யதைக் கருத்தில் கொண்டு, இந்த நிலை­மையைத் தவிர்க்க, அனைத்துத் தரப்­பி­னரும் நியா­ய­மான மற்றும் உரிய முறையில் பிர­தி­நி­தித்­துவம் பெற வேண்டும் என்­பதை உறு­தி­செய்யும் கல்விச் சீர்­தி­ருத்­தங்கள் மூலம் இலங்கை சமத்­துவம் மற்றும் ஒற்­று­மைக்­கான தனது உறு­திப்­பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

 2026 ஆம் ஆண்டு சீர்­தி­ருத்தம் இலங்­கையின் கல்வி வர­லாற்றில் ஒரு மைல்­கல்­லாகக் கரு­தப்­ப­டு­கி­றது. எந்­த­வொரு சமூ­கமும் முடி­வெ­டுக்கும் செயல்­மு­றை­யி­லி­ருந்து விலக்­கப்­ப­ட­வில்லை என்­பதை உறு­தி­செய்­வதன் மூலம், நம்­பிக்கை, ஒற்­றுமை மற்றும் நியா­யத்தை வலுப்­ப­டுத்­திய ஒரு சீர்­தி­ருத்­த­மா­கவும் இது நினை­வு­கூ­ரப்­பட வேண்டும். இந்த சீர்­தி­ருத்த செயல்­முறை அனைத்து இலங்­கை­யர்­களின் பகி­ரப்­பட்ட அபி­லா­ஷை­களை உண்­மை­யாகப் பிர­தி­ப­லிப்­ப­தற்­காக, விரை­வா­கவும் தீர்க்கமாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!