மட்டக்களப்பில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பார்வை இழந்த மாணவி
#SriLanka
#Batticaloa
#Eye
#Examination
#Girl
Prasu
3 hours ago

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி, பார்வை இழந்த மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்று வரும் இவர் 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதி அதிபர் தம்பிராசா சிவக்குமார் தெரிவித்தார்.
விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வெற்றி புள்ளி எண்பதாகும். குறித்த மாணவி 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



