இன்றைய ராசிபலன் (04.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
இன்றைய ராசிபலன் (04.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். திட்டமிட்டபடி வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இழுபறியான விவகாரம் முடியும்.

பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

கார்த்திகை 1: வியாபார நெருக்கடி விலகும். சிறு வியாபாரி, தொழிலாளர்கள் சங்கடம் நீங்கும். திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வரும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். வருமானம் உயரும். பெரியவர்களிடம் வாழ்த்து பெறுவீர்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.

திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். கவனமாக செயல்படுவதால் சங்கடம் தவிர்க்கப்படும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளில் குளறுபடி உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

கடகம்:

புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். பிறரை அனுசரித்துச் செல்வீர். குடும்ப நெருக்கடி விலகும். தேவையான வருமானம் வரும்.

பூசம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ஆயில்யம்: வியாபார பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். பொன் பொருள் சேரும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.

சிம்மம்:

மகம்: நினைப்பது நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்ப்பு மறையும். எதிர்பார்த்த வரவு வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். பகைவர்கள் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வழக்கு சாதகமாகும்.

உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உறவினர்கள் உங்கள் வீடுதேடி வருவர். திருமண வயதினருக்கு வரன் வரும்.

சிம்மம்:

மகம்: நினைப்பது நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்ப்பு மறையும். எதிர்பார்த்த வரவு வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். பகைவர்கள் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வழக்கு சாதகமாகும்.

உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உறவினர்கள் உங்கள் வீடுதேடி வருவர். திருமண வயதினருக்கு வரன் வரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகள் நடக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.

அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.

சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்:

சித்திரை 3,4: நன்மையான நாள். எதிர்காலம் பற்றிய எண்ணம் உண்டாகும். புதிய திட்டம் தீட்டுவீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.

சுவாதி: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். ஒரு சிலர் புதிய வாகனம், வீடு வாங்குவீர்கள்.

விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்

விசாகம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.

அனுஷம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். அரசுவழியில் மேற்கொண்ட தேவை பூர்த்தியாகும்.

தனுசு:

மூலம்: மனதில் தெளிவு பிறக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். செய்துவரும் தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்.

பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்.

உத்திராடம் 1: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். செயலில் நெருக்கடி உண்டாகும்.

திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடை உண்டாகும். மனம் குழப்பம் அடையும். புதிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.

அவிட்டம் 1,2: உங்கள் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். நேற்றைய பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் காண யோசிப்பீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். விரயச்செலவு கூடும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

சதயம்: வியாபாரம் விருத்தியாகும். விருப்பம் நிறைவேறும். தம்பதிகளுக்கிடையே சுமுகமான நிலை உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.

பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

உத்திரட்டாதி: எதிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் அக்கறை கூடும். புதிய வாடிக்கையாளர் வருவர். குடும்பத்தில் சுமூகமான சூழல் உண்டாகும்.

ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலை இன்று நடக்கும். திடீர் வரவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும். குழப்பம் விலகும். நினைத்ததை சாதிப்பீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!