புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

டிஜிட்டல் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கைப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு 2025 (ISAE) இல் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் உள்ள பலதரப்பட்ட பங்குதாரர்களை உலகளாவிய விவசாயம், நிலைத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆராய ஊக்குவிக்கிறது.
காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கும் புதுமையான, நடைமுறை மற்றும் முறையான தீர்வுகளை வளர்ப்பதற்கு கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும் என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



