பாதாள உலகக் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது - பாதுகாப்பு அமைச்சர்!
#SriLanka
#Crime
# Ministry of Defense
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 day ago

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம் மற்றும் ஆதரவுடன் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் நீண்ட காலமாக வளர அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
பாதாள உலகக் குற்றங்களுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்றும், அத்தகைய குழுக்கள் பொதுமக்களை தொடர்ந்து ஒடுக்குவதற்கு இனி வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



