வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஆகஸ்ட் 27 (August 27)
#people
#history
#Lanka4
#World
Prasu
3 hours ago

கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது.
- 1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை.
- 1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.
- 1664 – பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
- 1689 – உருசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1776 – லோங் தீவுச் சண்டை: இன்று புரூக்ளின் என அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
- 1781 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: பொள்ளிலூர் போர் (1781): ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசுப் படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் போர் இடம்பெற்றது. 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: துலோன் நகரம் பிரெஞ்சுப் குடியரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது. பிரித்தானிய, எசுப்பானியப் படைகளைத் தனது துறைமுகத்தில் இறங்க அனுமதித்தது. இதன் விளைவாக பிரெஞ்சு புரட்சிப் படைகள் துலோனைக் கைப்பற்றின.
- 1810 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய அரச கடற்படையைத் தோற்கடித்தது. இதன் மூலம் பிரெஞ்சுத் தீவில் கிராண்ன் போர்ட் துறைமுகத்தை பிரித்தானியா கைப்பற்றுவதை முறியடித்தது.
- 1813 – பிரெஞ்சுப் பேரரசன் முதலாம் நெப்போலியன் ஆத்திரிய, உருசிய, புருசியப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.
- 1828 – பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
- 1832 – அமெரிக்காவின் சவுக் பழங்குடித் தலைவர் பிளாக் ஹாக் அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தார். பிளாக் ஹாக் போர் முடிவுக்கு வந்தது.
- 1859 – அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
- 1881 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஜியார்ஜியா சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
- 1883 – இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
- 1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1896 – ஆங்கிலேய-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சான்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 - 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
- 1916 – முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா-அங்கேரியுடன் போரை அறிவித்தது.
- 1928 – போரை சட்டவிரோதமாக்கும் கெலொக்-பிறையண்டு உடன்படிக்கையில் 15 நாடுகள் கையெழுத்திட்டன. மொத்தமாக 61 நாடுகள் இதில் பின்னர் கையெழுத்திட்டன.
- 1933 – ஆபிரிக்கான மொழியில் விவிலியம் முதல்தடவையாக மொழிபெயர்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் புளும்பொன்டின் நகரில் இடம்பெற்ற விவிலிய விழாவில் இது அறிமுகமானது.
- 1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது.
- 1942 – உக்ரைனில் சார்னி என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை ஆரம்பமானது. இரண்டு நாள் தாக்குதல்கலில் 14,000 முதல் 18,000 யூதரக்ள் கொல்லப்பட்டனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் சொலமன் தீவுகளில் ஒன்றான நியூ ஜோர்ஜியா தீவில் இருந்து வெளியேறினர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் வான் சண்டைப் படை கிரீட் நகரில் வொரிசியா கிராமத்தைக் குண்டு வீசி அழித்தது.
- 1952 – லக்சம்பேர்க்கில் மேற்கு செருமனிக்கும் இசுரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி செருமனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.
- 1956 – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
- 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
- 1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது.
- 1971 – ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது.
- 1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
- 1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1982 – துருக்கிய இராணுவ தூதர் அட்டில்லா அல்டிகாட் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.
- 1985 – நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது.
- 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து மல்தோவா பிரிந்து தனிநாடாகியது.
- 2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக (55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு) கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
- 2003 – வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு அமைதி வழியில் தீர்வு காணும் பொருட்டு தெற்கு மற்று வட கொரியா, அமெரிக்கா, சீனா, சப்பான், உருசியா ஆகிய ஆறு நாடுகள் முதல் கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டன.
- 2006 – அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொம்ஏர் விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் உயிரிழந்தனர்.
- 2009 – பர்மாவின் கோக்காங் சிறப்புப் பிராந்தியத்தில் பர்மிய இராணுவத்துக்கும் உள்ளூர் இராணுவத்துக்கும் இடையில் மூன்று நாள் சமர் இடம்பெற்றது.
- 2011 – ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் கிழக்குக் கரையைத் தாக்கியதில் 47 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 865 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (இ. 925)
- 1759 – எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1776)
- 1770 – எகல், செருமானிய மெய்யியலாளர் (இ. 1831)
- 1859 – தோரப்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1932)
- 1908 – எம். எம். தண்டபாணி தேசிகர், கருநாடக, தமிழிசைப் பாடகர், நடிகர்
- 1908 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2001)
- 1908 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (இ. 1973)
- 1912 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி, பிபிசி தமிழ் ஒலிபரப்பாளர் (இ. 2000)
- 1916 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2006)
- 1939 – டி. ஏ. கே. இலக்குமணன், தமிழக அரசியல்வாதி
- 1963 – சுமலதா, இந்தியத் திரைப்பட நடிகை
- 1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மற்போர் வீரர், நடிகர்
- 1973 – மாலதி லட்சுமணன், தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி
- 1974 – முகம்மது யூசுப், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 1976 – அவுத்ரி தெல்சாந்தி, பிரெஞ்சு வானியலாளர், உயிரியலாளர்
- 1979 – ஆரோன் பவுல், அமெரிக்க நடிகர்
- 1988 – அலெக்சா வேகா, அமெரிக்க நடிகை, பாடகி
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



