பழிவாங்கும் செயலை மேற்கொள்ளும் அரசாங்கம் - ரணிலின் கைது தொடர்பில் மஹிந்த விமர்சனம்!
#SriLanka
#Mahinda Rajapaksa
#Ranil wickremesinghe
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைத்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக சிறைச்சாலை மருத்துவமனைக்கு சென்ற பின்னர் அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டிய அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறில்லை என்று கூறியுள்ளார்.
மக்கள் தொடர்ந்து அரசியல் தலைவர்களை ஆதரிப்பதாக அவர் வலியுறுத்தினார், "நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் எங்களை நேசிக்கிறார்கள்." எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



