வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஆகஸ்ட் 22 (August 22)

#people #history #Lanka4 #World
Prasu
3 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஆகஸ்ட் 22 (August 22)

கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 131 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்


  • 392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
  • 1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது.
  • 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.
  • 1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
  • 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள்.
  • 1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • 1654 – பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர்.
  • 1711 – கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர்.
  • 1717 – எசுப்பானியப் படைகள் சார்தீனியாவில் தரையிறங்கின.
  • 1770 – ஜேம்ஸ் குக் (இன்றைய குயின்சுலாந்தில் உள்ள) பொசெசன் தீவை அடைந்து அதனை பிரித்தானியாவுக்காக உரிமை கோரி ஆத்திரேலியாவின் கிழக்குக் கரை அனைத்துக்கும் நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
  • 1780 – கப்டன் ஜேம்ஸ் குக்கின் ரெசொலூசன் கப்பல் இங்கிலாந்து திரும்பியது. (குக் அவாயில் கொல்லப்பட்டார்).
  • 1791 – எயித்தியில் அடிமைகளின் புரட்சி செயிண்ட் டொமிங்கு நகரில் ஆரம்பமானது.
  • 1798 – ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர்.
  • 1827 – பெருவின் அரசுத்தலைவராக ஒசே டெ லா மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1849 – ஆஸ்திரியா ஆளில்லா ஊதுபைகளை வெனிசு நகரத்துக்கு எதிராக அனுப்பியது. வரலாற்றில் முதலாவது வான் தாக்குதல் இதுவாகும்.
  • 1864 – 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.
  • 1872 – இலங்கையில் முதலாவது அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.
  • 1875 – சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக உருசியாவுக்கும் சப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • 1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா சப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.
  • 1911 – பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி படைகள் உருசியாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, யப்பான், இத்தாலி]] மீது பிரேசில் போர் தொடுத்தது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் செருமானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.
  • 1949 – கனடாவில் குவீன் சார்லட் தீவுகளில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.
  • 1953 – பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.
  • 1962 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
  • 1968 – திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.
  • 1972 – ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.
  • 1978 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.
  • 1981 – சீன குடியரசில் வானூர்தி ஒன்று வானில் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 110 பேரும் உயிரிழந்தனர்.
  • 1985 – பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.
  • 1989 – நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.
  • 2004 – நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.
  • 2006 – கிழக்கு உக்ரைனில் உருசிய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.
  • 2006 – கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக அவருக்கு பீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.
  • 2012 – கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்


  • 1823 – லூயிசு மார்ட்டின், பிரெஞ்சுக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1894)
  • 1834 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1906)
  • 1877 – ஆனந்த குமாரசுவாமி, இலங்கை வரலாற்றாளர், மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1947)
  • 1902 – லெனி ரீபென்ஸ்டால், செருமானிய நடிகை (இ. 2003)
  • 1904 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (இ. 1997)
  • 1920 – ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)
  • 1924 – ஹரிசங்கர் பரசாயி, இந்திய எழுத்தாளர் (இ. 1995)
  • 1927 – டி. ஜி. லிங்கப்பா, திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2000)
  • 1955 – சிரஞ்சீவி, இந்திய நடிகர், அரசியல்வாதி
  • 1958 – லிவிங்ஸ்ட்ன், தமிழகத் திரைப்பட நடிகர், திரைக்கதை ஆசிரியர்
  • 1971 – ரிச்சர்ட் ஆர்மிட்டேச், ஆங்கிலேய நடிகர்
  • 1975 – ரோட்ரிகோ சாண்டோரோ, பிரேசில் நடிகர்
  • 1978 – ஜேம்ஸ் கோர்டன், ஆங்கிலேய நடிகர், எழுத்தாளர்
  • 1991 – பெட்ரிக்கோ மெக்கெடா, இத்தாலிய கால்பந்து வீரர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!