வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஆகஸ்ட் 21 (August 21)

#people #history #Lanka4 #World
Prasu
3 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஆகஸ்ட் 21 (August 21)

கிரிகோரியன் ஆண்டின் 233 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்


  • 1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர்.
  • 1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.
  • 1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர்.
  • 1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
  • 1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
  • 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.
  • 1791 – எயித்தியில் இடம்பெற்ற வூடூ பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.
  • 1808 – ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.
  • 1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1831 – வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
  • 1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
  • 1920 – ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.
  • 1957 – சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.
  • 1959 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.
  • 1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
  • 1971 – பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.
  • 1982 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.
  • 1983 – பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
  • 1986 – கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கி.மீ. சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.
  • 1988 – நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.
  • 1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
  • 1993 – நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.
  • 1994 – மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.[2]
  • 1995 – அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேசில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.[3]
  • 2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
  • 2013 – சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.
  • 2014 – குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்


  • 1567 – பிரான்சிசு டி சேலசு, சுவிட்சர்லாந்து ஆயர், புனிதர் (இ. 1622)
  • 1765 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (இ. 1837)
  • 1789 – அகுஸ்டின்-லூயி கோசி, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1857)
  • 1907 – ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவுடமைவாதி (இ. 1963)
  • 1915 – இசுமத் சுகதாய், இந்திய உருது எழுத்தாளர் (இ. 1991)
  • 1917 – லியோனிடு ஹுர்விக்ஸ், உருசியப் பொருளியலாளர், கணிதவியலாளர் (இ. 2008)
  • 1929 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் 1976)
  • 1929 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, அரசியல் கைதி (இ. 2017)
  • 1930 – சுஜித் முக்கர்ஜி, இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 2003)
  • 1934 – ஜான் லீவிஸ் ஹால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
  • 1942 – ம. வே. பசுபதி, தமிழக எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 2022)
  • 1961 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2019)
  • 1963 – ராதிகா, தமிழகத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்
  • 1963 – ஆறாம் முகம்மது, மொரோக்கோ மன்னர்
  • 1973 – சேர்ஜி பிரின், கூகுள் நிறுவனர்
  • 1978 – பூமிகா சாவ்லா, இந்திய நடிகை
  • 1978 – கனிகா கபூர், இந்தியப் பின்னணிப் பாடகர்
  • 1984 – நியல் டெக்ஸ்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
  • 1984 – பருன் சொப்டி, இந்திய நடிகர்
  • 1985 – மேலீசா, பிரெஞ்சுப் பாடகி
  • 1986 – உசேன் போல்ட், யமைக்கா ஓட்டவீரர்
  • 1988 – சனா கான், இந்திய நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!