நைஜீரியாவில் சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து - 40 பேர் மாயம்!
#SriLanka
#world_news
#Missing
#Nigeria
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

நைஜீரியாவில் நேற்று (17.08) வடமேற்கு சோகோட்டோ மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான சந்தைக்கு 50 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அவசரகால நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்கு பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசரகால உதவியாளர்களுடன் ஒத்துழைத்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



