கால்வாய் ஒன்றில் இருந்து 5,038 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு!
#SriLanka
#Police
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 day ago

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 5,038 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெடலாவ கால்வாயின் படுகையிலிருந்து கலென்பிந்துனுவெவ பொலிஸார் குறித்த தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
இப்பகுதியில் மேலும் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மேலும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் கால்வாயில் கையிருப்பைக் கொட்டியதற்குக் காரணமானவர்களை புலனாய்வாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



