கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு!
#SriLanka
#water
#Gampaha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கோரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீட்டுவசதித் திட்டம், உரபொல, திக்கந்த, மீவிடிகம்மன, மைம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டிய மற்றும் எல்லமுல்ல ஆகிய பகுதிகளுக்கு வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.
நீர் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் வாரியம் வருத்தம் தெரிவிக்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
