ஆண்களுக்கும் சலுகை அரசு பேருந்தில் .......

இந்தத் திட்டத்தின் மூலம் தெலுங்கானாவில் தினமும் 34 லட்சம் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். பெண்கள் இலவச பயணத்திற்கான பணத்தை மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு தாமதமாக வழங்கி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மட்டும் இலவச பயண திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் டீசல் பராமரிப்பு செலவுக்காக பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது ஆண்களுக்கும் அரசு பஸ்களில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்யும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு டிக்கெட் விலையில் 25 சதவீத சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண மற்றும் விரைவு பஸ்கள் குளிர்சாதன பஸ்களில் இந்த சலுகை அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் அதிக அளவில் ஆண்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி போதும் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



