நல்லூர் கந்தன் ஆலயத்தில் போதிய கழிவறைகள் இல்லையா?
யாழ்ப்பாணத்திற்கு பாமரன் தொடக்கம் ஜனாதிபதி வரை வந்தால் நல்லுர்க் கந்தனை தரிசிக்காமல் செல்வது இல்லை.
வெளிநாட்டவர்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த நிலையில் இப்படியான ஆன்மீக வளாகத்தினுள் வருகின்றவர்களின் நலன் கருதி போதிய வசதிகளுடன் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது துரதிஷ்டவசமானது. இதனை அங்கு சென்ற பலர் குறையாக கூறுகின்றனர்.
இதனை எமது #லங்கா4 ஊடகம் ஆராய்ந்துள்ளது. இந்த நிலையில் அங்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி தகுந்த வசதியுடன் கழிப்பறைகளை அமைத்துக் கொடுக்கும் படி யாழ்.மாநகரசபையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்களின் நன்மை கருதி இதனை உரிய தரப்பினரின் கவனத்திகொள்ளவேண்டும் என #LANKA4 ஊடகம் பொறுப்புரிமையோடு கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
இச்செய்தியை இதற்கு பொறுப்பான பலருக்கு பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஊடகம் #LANKA4.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
