சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது!
#SriLanka
#Arrest
#Soldiers
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 2,937 ராணுவ வீரர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
கூடுதலாக, 289 கடற்படை வீரர்களும் 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



