ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக 2030 க்குள் மாறும் தமிழ் நாடு - மு.க.ஸ்டாலின்

தென் தமிழ்நாடு பற்றி கலைஞர் கண்ட கனவை தற்போது நனவாக்கி வருகிறோம். தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது. தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கான கட்டமைப்பை திராவிட மாடல் அரசு சிறப்பாக உருவாக்கி உள்ளது.எனவும் முத்துநகரான தூத்துக்குடியில் 2-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகின்றது .
அத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயில் தூத்துக்குடி. செமி கண்டக்டர், மின் வாகனம், பசுமை ஹட்ரஜன் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.
எனவே வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்.என்பது தான் திமுக அரசின் குறிக்கோள் எனவும் கூறியுள்ளார் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



