கொஸ்கொட பகுதியில் 23 வயதுடைய இளைஞர் சுட்டு கொலை!
#SriLanka
#Investigation
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
கொஸ்கொட தூவமோதர பகுதியில் இன்று (31.07) அதிகாலை 5.30 மணியளவில் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இறந்தவர் ஆமை மையத்தின் உரிமையாளரின் மகன் அருத் மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
