ஜார்க்கண்டில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதிய பேருந்து - 18 பேர் பலி!
#India
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
இந்தியாவின் ஜார்க்கண்டில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரியுடன் பேருந்து மோதியதில் 18 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜமுனியா வனப்பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், இது இன்னும் வெளியாகவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
