இன்றைய ராசிபலன் (23.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய
நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். குடும்பத்துடன்
சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.பரணி: தடைபட்ட வேலை நிறைவேறும். வாழ்க்கைத்
துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு வெளியூர்
பயணம் ஏற்படும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும்.
முயற்சி இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும். செலவிற்கேற்ற பணம் வரும்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: வரவால் வளம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
வரவேண்டிய பணம் வரும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.ரோகிணி: வெளி
வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
புதிய முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும்.
குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணம் லாபம் தரும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்கள் ஒத்துழைப்பு
உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும்.திருவாதிரை: திட்டமிட்டு
செயல்படுவீர். பழைய கடன்கள் வசூலாகும். நீங்கள் ஈடுபடும் முயற்சி
வெற்றியாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி
நுட்பத்தால் நேற்றைய எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம்
தரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.
கடகம்:
புனர்பூசம் 4:
திருப்புமுனையான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில்
லாபம் அதிகரிக்கும். சங்கடம் விலகும்.பூசம்: பெரியோர் ஆதரவால் வேலை
நடக்கும். இஷ்ட தெய்வத்தை வழிபட்டு செயல்பட நன்மை உண்டாகும்.ஆயில்யம்:
உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி
நீங்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்.
சிம்மம்:
மகம்:
அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.
முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: முடிவு செய்த வேலைகளை ஒத்தி
வைப்பீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். மனம் குழப்பம் அடையும்.
கோயில் வழிபாடு நன்மை தரும்.உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால்
எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். விருப்பத்தில் தடை தோன்றும்.
எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது.
நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.அஸ்தம்: உங்கள் செயல் வெற்றியாகும்.
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம்
அதிகரிக்கும். சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும் வேலையில் வெற்றி
உண்டாகும். இன்று விவேகத்துடன் செயல்பட்டு எடுத்த வேலையை முடிப்பீர்கள்.
துலாம்:
சித்திரை
3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு
வரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.சுவாதி:
வியாபாரத்தில் போட்டியாளர்கள் தொல்லை விலகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு
வரும். சுறு சுறுப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.விசாகம்
1,2,3: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
வருமானம் உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர். தேவை பூர்த்தியாகும்.
விருச்சிகம்:
விசாகம்
4: செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில்
வெற்றியுண்டாகும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும்.அனுஷம்:
நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும் என்றாலும், நீங்கள் ஈடுபடும்
வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.கேட்டை: திட்டமிட்ட வேலைகளில் கவனம்
செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உறவினரால் நன்மை
உண்டாகும்.
தனுசு:
மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பிரச்னை தேடி
வரும்.பூராடம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில்
ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திராடம் 1:
உங்கள் வேலைகள் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். புதிய முதலீடுகளை
தவிர்ப்பது நல்லது.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை
வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வரவு
அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.திருவோணம்: வம்பு, வழக்குகளில்
உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும்.
எதிர்பார்த்த பணம் வரும்.அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். எண்ணத்தை
இன்று சிதற விடவேண்டாம். அதனால் நடைபெற வேண்டிய வேலையும் இழுபறியாகும்.
கும்பம்:
அவிட்டம்
3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கெதிரான வேலையில் ஒருசிலர்
மறைமுகமாக ஈடுபடுவர். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.சதயம்: வரவு
அதிகரிக்கும். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். மனம் விரும்புவதை
அடைவீர். உங்கள் முயற்சி லாபமாகும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும்
ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் தேவை. குடும்பத்தில் இருந்த நெருக்கடி
விலகும்.
மீனம்:
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள்.
மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி
அடைவீர்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல் படுவதால்
எடுத்த வேலைகளை முடிக்க முடியும். கவனமாக செயல்படுவது நன்மையாகும். ஆலய
வழிபாடு நன்மைதரும்.ரேவதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன்
மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி
லாபமாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



