டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மே தின பேரணி!
#SriLanka
#Kilinochchi
#Project
#Lanka4
#may day
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 hours ago

டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்து. காக்காக்கடைச் சந்தியிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை நடைபவனி மற்றும் அமைதிப் பேரணி இடம்பெற்றது. தொடர்ந்து, மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, பெண்களிற்கு சம ஊதியம், சம உரிமை, தொழில் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
1984இல் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான டாபிந்து கூட்டமைப்பானது, கட்டுநாயக்க
மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயம் (FTZ) மற்றும் வடக்கில் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய
பகுதிகளை மையமாகக்கொண்டு பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும்,
மேம்படுத்துவதையும் நோக்காக கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



