காஷ்மீர் எல்லையில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு!
#India
#SriLanka
#Pakistan
#Kashmir
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட நடைமுறை எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் துருப்புக்கள் இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவ நிலைகளைச் சேர்ந்த வீரர்கள் இரவில் "கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும்" துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு "எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல்" நடந்ததாகவும், இந்திய துருப்புக்கள் சிறிய ஆயுதங்களுடன் சரியான முறையில் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



