ட்ரூடோ அரசாங்கத்தின் மீதான அதிருப்தி : அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்!
#SriLanka
#Canada
Thamilini
10 months ago

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று (20.12) ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.
ஆனால் அவர் வரும் நாட்களில் அல்லது வாரங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ட்ரூடோ தனது தலைமையின் மீது அதிகரித்து வரும் அதிருப்தியை எதிர்கொள்கிறார், கடந்த திங்கட்கிழமை அவரது நிதியமைச்சர் திடீரென வெளியேறியது அரசாங்கத்தின் மீதான அதிப்ரித்தியை ஊர்ஜிதப்படுத்தியது.
இந்நிலையில் பாராளுமன்றம் இப்போது அடுத்த மாத இறுதி வரை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளது. மீண்டும் அமர்வுகள் ஆரம்பமாகும்போது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



