கனடாவில் மனைவியை கொடூரமான முறையில் தாக்கிய ஈழத்தமிழர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கனடாவில் மனைவியை கொடூரமான முறையில் தாக்கிய ஈழத்தமிழர் கைது!

கனடாவில் மனைவியை கொடூரமான முறையில் தாக்கிய ஈழத்தமிழர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட 43 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளனான மனைவி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறுக்கு பாய்ந்து கணவன் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மனைவி 36 வயதுடையவர் எனவும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அவர் பயணித்த காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அன்று பிற்பகல், ஒரு இல்லத்தில் அதிகாரிகள் சந்தேக நபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

சந்தேக நபர் மீது கடுமையான தாக்குதல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோட்டார் வாகனத்தின் மீதான ஆபத்தான செயல்பாடு, விபத்து நடந்த இடத்தை விட்டு வெளியேறுதல் போன்ற 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் குற்றப்பிரிவின் 519-255-6700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!