வடக்கு ஹைட்டியில் தீ பிடித்த படகு : 40 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வடக்கு ஹைட்டியில் தீ பிடித்த படகு : 40 பேர் உயிரிழப்பு!

வடக்கு ஹைட்டியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். 

இரு தினங்களுக்கு முன்னர் 80க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகளுக்கு படகு ஒன்று புறப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  

எஞ்சியிருந்த 41 புலம்பெயர்ந்தோர் ஹெய்டியன் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டதாக விடாஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 11 புலம்பெயர்ந்தோர் தீக்காயங்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4