இந்தியாவில் காற்று மாசுப்பாட்டால் ஆண்டுக்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
"லான்செட் ப்ளீனரி ஹெல்த்" சஞ்சிகையின் அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகவும் தொடர்புடைய அறிக்கை காட்டுகிறது.