இந்தியாவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து : பலர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
டார்ஜிலிங் மாவட்டத்தில் அதிவேக பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 15 பேர் உயிரழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.