மத்தியமலை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை : உயரும் நீர்த்தேக்கங்களால் ஆபத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான்வெளி மட்டத்தை எட்டியுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து விமலசுரேந்திர, லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.



