முருகன் கோவில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
#SriLanka
#Jaffna
#Death
#Temple
#Body
Prasu
10 months ago

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயது சிவகுகானந்தன் சிந்துயா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்



