தீர்வின்றி முடிந்த கலந்துரையாடல் : தொழிற்சங்க நடவடிக்கையை தொடரும் பல்கலைக்கழக அமைப்புகள்!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் பொது மாநாடு தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் திரு.சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் திரு.கே.எல்.டி.ரிச்மன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மே 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது.
நேற்று இராஜாங்க அமைச்சர் ராகவனுடன் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அரசாங்கத் தரப்பிலிருந்து தீர்வுகளை வழங்குவதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இறுதித் தீர்வாக எங்களுக்கு ஏதாவது தேவை என்று நம்புகிறோம். அந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டவுடன், வேலை நிறுத்தம் இன்னும் 34 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



