07 நாட்களுக்கு மூடப்படும் மதுபானசாலைகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபான கடைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய நுவரகம் மாகாணம், கிழக்கு நுவரகம் மாகாணம் மற்றும் மிஹிந்தலை பிரிவு 03 ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படும்.



