இந்தியா-மத்தியப் பிரதேசத்தில் 10 வயது சிறுமி தற்கொலை
#India
#Death
#Girl
Prasu
11 months ago

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் தாயார் அவளை மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பெடகாட்டுக்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் சிறுமி இச்செயலை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன்னை பெடகாட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தனது தாயை வற்புறுத்திக் கொண்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாய் மறுத்ததால், சிறுமி மாடிக்கு சென்று கதவு திரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தன்வந்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத் பதக் தெரிவித்தார்.
“பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்



