இலங்கையில் இன்று தேசிய துக்கம் தினம் அனுஷ்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்தை முன்னிட்டு இன்று (21.05) தேசிய துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.



