கனடாவில் சீக்கிய தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயதான கரன் பிரார் மற்றும் 22 வயதான கமல் ப்ரீத் சிங் மற்றும் 28 வயதான கரண் ப்ரீத் சிங் ஆகிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மூவர் மீதும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) என்பவர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார், அதை இந்தியா மறுத்தது, இது இராஜதந்திர சண்டைக்கு வழிவகுத்தது.



