கடக ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

#Astrology
Mayoorikka
2 weeks ago
கடக ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன.

 12 ராசிகளில் இது 2வது சர ராசி ஆகும். பஞ்ச பூதங்களில் கடக ராசி நீர் தத்துவத்தை குறிக்கும் ராசியாகும். மேலும் இது ஒரு பெண் ராசியாகும். இது நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி கடகமாகும். கடக ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.

 கடக ராசியில் பிறந்தவர்களுக்கு, மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். 

பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான் பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும், அறிவாற்றலும் கொண்டவர்கள். இவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலை நிறுத்துவார்கள்.

 கடக ராசிக்காரர்கள் குழந்தைத்தனமானவர்கள். அவர்கள் விருப்பப்படி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் உச்சபட்ச கோபத்தை அடைவார்கள். நண்டுகளைப் போலவே கடக ராசிக்காரர்கள் சுயநலமானவர்கள், தங்கள் பொருட்களின் அதிக சொந்தம் கொண்டாடுபவர்கள். கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே பாதுகாக்கும் சுபாவம் கொண்டவர்கள். 

இதனால் சில சமயங்களில் அவர்கள் சற்று சுயநலமானவர்களாகக் கூட தோன்றலாம். அவர்கள் பொறாமை கொண்டவர்கள் தான் என்றாலும் மற்றவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மாட்டார்கள், அதே சமயம் எக்காரணம் கொண்டும் தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்ய மாட்டார்கள்.

 வாழ்க்கை

 கடக ராசி சந்திரனால் ஆளப்படுகிறது, இது மனம், உணர்ச்சிகள் மற்றும் இயற்கையின் ஆட்சியாக கருதப்படுகிறது. கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், எனவே இந்த மக்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இதன் காரணமாக, கடக ராசிக்காரர்கள் உண்மையான அன்பை எளிதில் பெறுவார்கள். அமைதியானவராகவும், நல்ல ஆசானாகவும், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். தாயின் குணங்களாக வளர்ப்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய குணங்கள் இவரிடம் இருக்கும். கருணை, உதவும் மனப்பான்மை கொண்டவர். எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி பேசுவார்.

 தொழில்

 இவர்கள் உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றமடைந்த நபராக இருப்பார். இவர்கள் மானசீகமாக பணியாற்றுபவர். கலையார்வம் மிக்க பணிகளில் ஆர்வம் கொண்டவர். உணவு தயாரித்தல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், கலைப் பொருட்கள், திரவம், புகைப்படம் ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும்.அதிர்ஷடவசமாக அவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் ஒரு இடத்தில் இல்லாதபோது கூட சிறந்த உள்ளுணர்வால் அனைத்தையும் உணர்ந்து கொள்கிறார்கள். உணவுத் தொழில், பெயிண்ட் தொழில், ஜெராக்ஸ், கம்பியூட்டர் செண்டர் உள்ளிட்ட தொழில்கள் கடக ராசிக்கார்களுக்கு உகந்ததாக அமையும். நகை அடகு கடை வைத்தால் அதிக லாபம் பெரும் அம்சம் உண்டு இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

 காதல்

 ஒரு மோசமான எதிர்மறை அதிர்வலை அல்லது ஒரு சோகமான விஷயம் கடக ராசிக்காரர்களின் உள்ளுணர்விலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் மிக நுட்பமான உணர்வு கொண்டவர்கள், ஒற்றை கேள்வி கூட கேட்காமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள். . கடக ராசிக்கார்கள் எப்பொழுது உங்களுக்கு துணையிருக்க வேண்டும் எப்போது உங்களைத் தனியாக விட வேண்டுமென்று தெரிந்து நடப்பவர்கள், அவர்களிடம் தாராளமாக உங்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். 

images/content-image/2024/04/1713407097.jpg

எதைப் பற்றியும் மதிப்பீடு செய்யாமல், தேவைப்படும்போது உங்கள் பக்கம் நிற்பவர்கள் கடக ராசிக்கார்கள். ஏனென்றால் மற்றவர்களுடைய சூழல்களை புரிந்துகொள்ள அடுத்தவர்களின் நிலையில் இருந்து பார்க்கக் கூடியவர்கள் கடக ராசிக்காரர்கள்.

 நம்மைப் பற்றி எப்படி மதிப்பிடுவார்களோ என்கிற அச்சம் இல்லாமல் மனம் விட்டு பேச ஒருவர் வேண்டுமென்றால் அதற்கு கடக ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். 

உங்கள் குறைகளோடு கடக ராசிக்காரர்கள் உங்களை விரும்பக்கூடிய தனித்தன்மை கொண்டவர்கள். உங்கள் திடீர் மாற்றங்கள், மோசமான பக்கங்கள் உள்ளிட்ட எல்லா விஷயங்களோடும் அவர்கள் உங்களை விரும்புகிறார்கள். உண்மையில் உங்கள் இயல்போடு உங்களை நீங்களே நேசிக்கவும் அவர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள்.