எல்பிட்டிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொலை!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (26.02) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கரந்தெனிய பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய 51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.