மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். மக்கள் அச்சத்தால் பரபரப்பு!

#India #Flight #Chennai #Bomb #Mumbai #Threat
மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். மக்கள் அச்சத்தால் பரபரப்பு!

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இண்டிகோ விமானம் 6E-5188 மும்பையில் தரையிறங்குவதற்கு 40 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தபோது, விமானக் கழிப்பறை ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியைக் கண்டறிந்ததாக விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்குத் தெரிவித்தனர். 

இதையடுத்து ஏ321 நியோ விமானம் காலைபத்திரமாக தரையிறங்கியது. இது ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கையாக இருந்ததால் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை விமானத்தை கையாண்டது.

 இந்நிலையில், மிரட்டலை அடுத்து மும்பையிலிருந்து சென்னை வரும் விமானங்களைக் கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மும்பையிலிருந்து சென்னை வந்த விமானத்தை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர். 

மும்பை விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4