ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் பவதாரணியின் பூதவுடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது!

#India #Death #Lanka4 #Music #Ilayyaraja
Mayoorikka
3 months ago
ஸ்ரீலங்கன்  ஏர்லைன்ஸ் மூலம் பவதாரணியின் பூதவுடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது!

மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரைப் பிரபலங்கள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.