எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரொக்கப்பணம் 1000-5000 வரை வழங்க கோரிக்கை

#India #Tamil Nadu #Pongal #அரசியல் #பணம் #லங்கா4 #money #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
3 months ago
எடப்பாடி பழனிசாமி பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரொக்கப்பணம் 1000-5000 வரை வழங்க கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.1,000 வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி, சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5,000 வழங்க வேண்டும். 

images/content-image/1704443644.jpg

எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும்.