எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
#SriLanka
#people
#Fuel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#petrol
Thamilini
1 year ago
நாட்டில் இன்று (31.12) எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையொன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை உயரும் என்ற நம்பிக்கையில் வாகன உரிமையாளர்கள் தற்போதைய விலைக்கே எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக கூறப்படுகிறது.
திருத்தியமைக்கப்பட்ட VAT விகிதங்கள் இன்று முதல் எரிபொருளைப் பாதிக்கும் என்பதால் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயரும் என எரிபொருள் விநியோகஸ்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.